web log free
April 02, 2026

நடாஷா பிணையில் விடுதலை

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நடாஷா எதிரிசூரியவை பிணையில் விடுவிக்க கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அவர் சார்பில் சமர்ப்பிக்கப்பட்ட பிணை மனுவை பரிசீலித்த கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ஆதித்ய பட்டபெதிகே இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

சட்டமா அதிபர் சார்பில் ஆஜரான பிரதி சொலிசிட்டர் ஜெனரல் திலிப பீரிஸ், பிணை கோரிக்கையை எதிர்க்கப் போவதில்லை என தெரிவித்ததை அடுத்து, பிணை உத்தரவை நீதிபதி அறிவித்துள்ளார். 

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd