web log free
May 17, 2024

லீசிங் நிறுவனங்கள் கொள்ளையர்கள் போல் செயற்படுவதாக மைத்திரி குற்றச்சாட்டு

பல லீசிங் நிறுவனங்கள் கொள்ளையர்களின் குழுவாக செயற்படுவதாக முன்னாள் ஜனாதிபதி பொலன்னறு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மைத்திரிபால சிறிசேன இன்று (5) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

வங்கிகளில் கடன் பெற்றவர்களின் சொத்துக்களை ஏலம் விட வேண்டுமானால் அதற்கு போதிய கால அவகாசம் வழங்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தில் இடம்பெற்று வரும் காலதாமதம் தொடர்பான விவாதத்தின் போதே முன்னாள் ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மைத்திரிபால சிறிசேன மேலும் குறிப்பிட்டுள்ளார்.

வழக்குகள் ஏன் அதிகரிக்கின்றன என்பதை கண்டறிய வேண்டும். வழக்குகள் அதிகரிப்பதற்கு போதைப்பொருள் பிரச்சனை முக்கிய காரணமாக உள்ளது. சிங்கப்பூரில் ஒரு வழக்கை விசாரிக்க அதிகபட்சம் மூன்று மாதங்கள் ஆகும். வழக்குகள் அதிகரிப்பதற்கு வறுமை ஒரு முக்கிய காரணம். நீதிமன்றங்களில் பெரும்பாலும் ஏழைகளின் வழக்குதான் இருக்கிறது. நீதிமன்றங்களில் பணக்காரர்கள் வழக்கு குறைவு. பரம்பரை பரம்பரையாக நில வழக்குகள் விசாரிக்கப்படுகின்றன. வழக்குகள் நீடிப்பதால் சிறைகளில் நெரிசல் அதிகரிக்கிறது. வழக்குகள் இழுத்தடிக்கப்படுவதை வழக்கறிஞர்கள் விரும்புகிறார்கள். இன்று லீசிங் நிறுவனங்கள் நடந்து கொள்ளும் விதம் தவறானது. எப்போதும் அப்படித்தான். இப்போது அது மிகையாகிவிட்டது. ஒருதலைப்பட்சமான கொள்ளை போல நடக்கிறார்கள். வங்கிக் கடன் பெற்றவர்களின் சொத்துக்களை ஏலம் விட கால அவகாசம் வழங்க வேண்டும்.