web log free
May 17, 2024

காதலியை நிலத்தில் தள்ளி உதைத்த பொலிஸ் கான்ஸ்டபிள்!

காதலியை தரையில்  தள்ளி உதைத்த கிளிநொச்சி பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரின் சேவை கடந்த 4ம் திகதி முதல் இடைநிறுத்தப்பட்டுள்ளது.

மனிதாபிமானமற்ற முறையில் தாக்கப்பட்டு தனமல்வில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட யுவதி பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் பின்னர் கான்ஸ்டபிளை பணி இடைநிறுத்தம் செய்ய கிளிநொச்சி சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

பொலிஸ் கான்ஸ்டபிளின் காதலி தனமல்வில ரணவ பிரதேசத்தில் வசிப்பவர் என்பதுடன் சந்தேகமடைந்த பொலிஸ் கான்ஸ்டபிள் அவரைச் சென்று பார்த்த போது தாக்கியுள்ளார்.

சம்பவம் தொடர்பில் தனமல்வில பொலிஸார் இந்த பொலிஸ் கான்ஸ்டபிளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க ஆரம்பித்துள்ளனர்.