web log free
May 17, 2024

திருடர்களை பிடிப்பதாக கூறுவது வெறும் பொய் நாடகம்

எதிர்க்கட்சியில் இருக்கும்போது திருடர்களைப் பிடிப்பதாகக் கூறுபவர்கள், ஆட்சிக்கு வந்த பிறகு அதனை செய்ய மாட்டார்கள். அப்போது எதிர்க்கட்சியில் இருப்போர் திருடர்களைப் பிடிப்போம் என்று கூறி இரு தரப்பினராகப் பிரிந்து விமர்சிப்பர். திருடர்கள் பிடிபடும் வரை மக்கள் எப்பொழுதும் காத்திருக்கிறார்கள் என வெளிவிவகார அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி பாராளுமன்றத்தில் தெரிவித்தார். 

திருடர்களை பிடிக்கும் முறைதான் நாளுக்கு நாள் மாறிவருகிறது என்று கூறிய அமைச்சர், இது முழுக்க முழுக்க நகைச்சுவையே என்றார்.

எந்த தகவலும் இல்லாமல் திருடர்களை திருடர்கள் என்று மக்களிடம் சொல்வது உண்மையான திருடர்களுக்கு செய்யும் மிகப்பெரிய கேடு என்றார்.

ஊழலுக்கு எதிரான சட்டமூலம் மீதான விவாதத்தின் போது அலி சப்ரி இவ்வாறு தெரிவித்தார்.