web log free
May 17, 2024

நாட்டை சீர்குலைக்க சதித்திட்டம்!

நாட்டில் மீண்டும் நெருக்கடியை உருவாக்கி ஒட்டுமொத்த செயற்பாடுகளையும் சீர்குலைக்கும் நோக்கில் குழுவொன்று செயற்படுவதாக புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்துள்ளதாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன் தெரிவித்துள்ளார்.

இந்த குழுக்களின் உறுப்பினர்கள் கடந்த வாரம் கண்டி அல்கடுவ பிரதேசத்தில் உள்ள பிரபல ஹோட்டல் ஒன்றில் பயிலரங்கு ஒன்றை நடத்தியதாகவும், ஆர்ப்பாட்டத்தின் போது இராணுவம் மற்றும் பொலிஸாரை எவ்வாறு எதிர்கொள்வது என்பது குறித்து பங்கேற்பாளர்களுக்கு விசேட பயிற்சி அளிக்கப்பட்டதாகவும் செய்தித்தாள் ஒன்று தெரிவித்துள்ளது.

போராட்டத்தின் போது ஆர்ப்பாட்டக்காரர்கள், இராணுவம் மற்றும் பொலிஸாருக்கு எவ்வாறு பதிலடி கொடுப்பது மற்றும் கண்ணீர் புகை மற்றும் நீர் தாக்குதல்களை எவ்வாறு எதிர்கொள்வது என்பது தொடர்பில் நடைமுறை மற்றும் தத்துவார்த்த பயிற்சிகள் இங்கு நடத்தப்பட்டுள்ளதாகவும் புலனாய்வு அறிக்கைகள் குறிப்பிடுகின்றன.