web log free
September 10, 2025

அனைவரும் ஜனாதிபதியுடன் இணைய வேண்டும் - மொட்டுக் கட்சி பிரபலம் அழைப்பு

உலக நாடுகளின் போராட்டங்களினால் பல  வீழ்ச்சியடைந்து பல வருடங்களாக அராஜகமாக இருந்த போதிலும், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் சரியான தலைமைத்துவம் கொடுத்து ஒரு வருட குறுகிய காலப்பகுதியில் இலங்கையை மீட்க வழிவகுத்ததாக பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.

ஜூலை 09ஆம் திகதி ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தனிப்பட்ட வீட்டிற்கு தீ வைக்கப்பட்டு, பொதுச் சொத்துக்கள் அழிக்கப்பட்ட நாளாக வரலாற்றில் இடம்பிடித்துள்ளது என்பதை நினைவுகூர்ந்த எம்.பி., இந்தப் போராட்டத்தில்  கிளர்ச்சியாளர்களின் நிகழ்ச்சி நிரல் இன்று நீதிமன்றச் செயற்பாட்டின் மூலம் வெளிப்பட்டு வருவதாகத் தெரிவித்தார். 

ஸ்திரமான நாடு - அனைவரும் ஒன்றுபடுவோம் என ஜனாதிபதி ஊடக அமையத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே பொதுஜன ஐக்கிய பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

நாடு முழுவதும் இன்று நாட்டின் பொருளாதாரத்தை மீளக் கட்டியெழுப்புகின்றார். இதைக் குறிப்பிட்ட மகிந்தானந்த அளுத்கமகே, ஜனாதிபதி முன்னெடுக்கும் வேலைத்திட்டத்தில் சகலரையும் இணைந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றேன் என்றார். 

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd