web log free
August 02, 2025

பேருந்தில் பயணித்த துர்க்கிய பெண்ணுக்கு இராணுவ கோப்ரல் பாலியல் தொல்லை

தம்புள்ளை நோக்கிப் பேருந்தில் பயணித்துக் கொண்டிருந்த துருக்கிய யுவதிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக சந்தேகத்தின் பேரில் இராணுவ கோப்ரல் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் மாத்தளை மெல்பிட்டிய பிரதேசத்தை சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது.

மூன்று துருக்கிய யுவதிகளும் பாகிஸ்தானிய இளைஞரும் அடங்கிய குழுவொன்று கண்டியிலிருந்து தம்புள்ளை நோக்கி பேருந்தில் சென்று கொண்டிருந்த போது சந்தேகநபர் தமக்கு அருகில் அமர்ந்திருந்த பெண் ஒருவரின் உடலை தடவியது விசாரணையில் தெரியவந்துள்ளது.

குறித்த பாகிஸ்தானிய இளைஞன் நடத்துனர் மற்றும் பயணிகளின் உதவியுடன் சந்தேக நபரை பிடித்து தம்புள்ளை பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளார்.

சந்தேகநபர் இன்று தம்புள்ளை நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்படவுள்ளார். 

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd