web log free
September 10, 2025

பலாலியில் பாடசாலை மாணவி மீது பாலியல் துஸ்பிரயோகம்

யாழ்ப்பாணம் பலாலி பிரதேசத்தில் உள்ள அரச பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் மாணவி ஒருவரை துஷ்பிரயோகம் செய்த சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பலாலி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

எதிர்வரும் 12ஆம் திகதி 3 பாடசாலை மாணவிகளிடம் வாக்குமூலம் பெறவிருந்த போதிலும், கல்வி நடவடிக்கைகளில் ஈடுபட்டமையினால் அவர்களால் வாக்குமூலம் பெறமுடியவில்லை எனவும், கல்வி நடவடிக்கைகள் நிறைவடைந்ததன் பின்னர் மூவரிடமும் வாக்குமூலங்களை பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பொலிஸார் தெரிவித்தனர். 

குறித்த நபர் தன்னை துன்புறுத்தி துஷ்பிரயோகம் செய்வதாக பாடசாலை அதிபருக்கு அறிவித்ததையடுத்து அதிபர் பலாலி பொலிஸாருக்கு அறிவித்ததையடுத்து பலாலி பிரதேசத்தை சேர்ந்த சந்தேக நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபரை பாடசாலை மாணவிகளிடம் வாக்குமூலம் பெற்று யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக விசாரணைகளை மேற்கொண்டு வரும் பலாலி பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd