web log free
September 08, 2024

கொழும்பில் 14 மணிநேர நீர்வெட்டு

கொழும்பின் பல பகுதிகளில் நாளை மறுநாள் (15) காலை 8 மணி முதல் இரவு 10 மணி வரை 14 மணிநேர நீர் வெட்டு அமுல்படுத்தப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

இதன்படி கொழும்பு 1 முதல் 4 வரை மற்றும் 7 முதல் 15 வரையான பகுதிகளுக்கு நீர் விநியோகம் தடைப்படவுள்ளது.

மாளிகாகந்த மற்றும் எலிஹவுஸ் நீர்த்தேக்கங்களுக்கு நீர் இறைக்கும் நீரேற்று நிலையத்திற்கு நீர் விநியோகிக்கும் மின்சார விநியோக அமைப்பின் அத்தியாவசிய பராமரிப்பு பணிகள் காரணமாக நீர் விநியோகம் இடைநிறுத்தப்படுவதாக சபை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.