web log free
February 04, 2026

இலங்கைக்கு சுற்றுலா வந்த டென்மார்க் பெண் சடலமாக மீட்பு

கடுகன்னாவ அலகல்ல மலையில் நடைபயணம் மேற்கொண்ட போது காணாமல் போனதாக கூறப்படும் 32 வயதுடைய டென்மார்க் பெண்ணின் சடலம் பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கடந்த திங்கட்கிழமை (ஜூலை 10) முதல் நடைபயணத்தின் போது பெண் காணாமல் போனதை அடுத்து, காவல்துறை மற்றும் STF நேற்று தேடுதல் நடவடிக்கையை ஆரம்பித்தது.

டேனிஷ் பெண் மலையில் நடைபயணம் மேற்கொண்ட போது தவறி விழுந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

ஜூன் 26 அன்று நாட்டிற்கு வந்த பெண் தனியாக சுற்றுப்பயணம் செய்து கொண்டிருந்தார். அவர் ஜூலை 10 ஆம் திகதி கண்டி பேக் பேக்கர்ஸ் விடுதிக்கு சென்றதாக கூறப்படுகிறது.

தான் உல்லாசமாக செல்வதாக விடுதி நிர்வாகத்திடம் கூறியதாகவும், கடந்த செவ்வாய்க்கிழமை (11) இரவு விடுதிக்கு திரும்பாத போது, நிர்வாகம் கண்டி பொலிஸாருக்கு தெரியப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சடலம் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் வெளிவிவகார அமைச்சுக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd