web log free
September 08, 2024

சில எம்பிக்களின் தொடர் குறித்து டயானா கமகே சர்ச்சை பேச்சு

Onmax பிரமிட் திட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஈடுபட்டுள்ளதாக சுற்றுலாத்துறை இராஜாங்க அமைச்சர் டயானா கமகே பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

பிரமிட் திட்டத்தின் மூலம் ஏற்கனவே 300 கோடி கணக்குகள் நிறுத்தப்பட்டுள்ளதாகவும், மூவாயிரம் கோடி ரூபாய் நாட்டிற்கு வெளியே கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும் ராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டார்.

இரகசியப் பொலிஸாரும் சட்டமா அதிபர் திணைக்களமும் இதனை மிக மெதுவாக ஆராய்ந்து வருவதாகவும், Onmax தடை செய்யப்பட்ட பின்னரும் மக்களிடம் இருந்து 292 கோடிகள் வசூலிக்கப்பட்டுள்ளதாகவும் ராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்.