web log free
September 08, 2024

சாணக்கியன் இராஜினாமா!

நாட்டின் நிதி வங்குரோத்துக்கான காரணங்களை ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட விசேட குழுவில் இருந்து நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் விலகியுள்ளார்.

குழுவின் தலைவர் சட்டத்தரணி சாகர காரியவசம் தலைமையில் இந்தக் குழு கூடியதுடன், உறுப்பினர் இராசமாணிக்கம் குழுவில் இருந்து விலகியுள்ளார்.

நாடு வங்குரோத்து நிலை ஏற்பட்ட போது நாட்டை ஆட்சி செய்த பிரதான கட்சியான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் செயலாளர் நாயகம் இந்தக் குழுவின் தலைவர் என்ற வகையில் இந்தக் குழுவின் சுதந்திரத்திற்கு தடையாக இருப்பதால் இந்தக் குழுவில் இருந்து விலகவுள்ளதாக உறுப்பினர் இராசமாணிக்கம் தெரிவித்துள்ளார்.