web log free
April 02, 2026

நிமல் லன்சாவினால் ஆடிப்போயுள்ள மொட்டுக் கட்சி

பாராளுமன்ற உறுப்பினர் நிமல் லான்சா தலைமையில் தற்போது பாராளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்படும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் பங்களிப்புடன் ஆரம்பிக்கப்படவுள்ள புதிய அரசியல் இயக்கத்தின் உத்தியோகபூர்வ அலுவலகம் அடுத்த வாரம் இராஜகிரிய பிரதேசத்தில் திறக்கப்படவுள்ளதாக பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

புதிய அரசியல் இயக்கமொன்றை ஸ்தாபிக்கும் இந்தப் பணியில் லன்சாவுக்கு மேலதிகமாக, பாராளுமன்ற உறுப்பினர்களான அனுர பிரியதர்சன யாப்பா, மஹிந்த அமரவீர, லசந்த அழகியவன்ன மற்றும் துமிந்த திஸாநாயக்க ஆகியோரும் ஈடுபட்டுள்ளதாக பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

தற்போது பாராளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்படும் சுமார் நாற்பது பாராளுமன்ற உறுப்பினர்கள் இந்த புதிய பிரச்சாரத்தில் இணைந்து கொள்ளவுள்ளதாகவும் அந்த எண்ணிக்கையை 50 ஆக உயர்த்தி அடுத்த அரசியல் நடவடிக்கைகள் எதிர்வரும் ஜனவரி மாதம் ஆரம்பிக்கப்படும் எனவும் மேற்படி பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளதாக அந்த பத்திரிகை மேலும் தெரிவிக்கிறது.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd