web log free
September 08, 2024

15 வயது சிறுமிகள் இருவர் காணாமல் போயுள்ளதாக முறைப்பாடு

இரட்டையர்களான சிறுமிகள் இருவர் காணாமல் போன சம்பவம் தொடர்பில் முந்தல் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

முந்தல் மங்கலஎலிய பிரதேசத்தில் வசிக்கும் 15 வயது 7 மாத வயதுடைய இரண்டு இரட்டைப் பெண் குழந்தைகளே காணாமல் போயுள்ளனர்.

இது தொடர்பில் மேற்கொண்ட விசாரணையின் போது, ​​நேற்று (ஜூலை 25) முதல் இருவரும் காணாமல் போயுள்ளதாக முந்தல் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.

குழந்தைகளின் தாயார் செய்த முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.