web log free
October 18, 2024

கள்ளக் காதலனுடன் ஓடிய மனைவி, தீ வைத்த கணவன்!

தன்னை பிரிந்து வேறு ஒருவருடன் முச்சக்கர வண்டியில் சென்றதை பார்த்த கணவர் முச்சக்கரவண்டிக்கு தீ வைத்து எரித்துள்ளதாக ஹொரணை தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.

முச்சக்கரவண்டிக்கு தீ வைத்த நபர் ஹொரண பிரதேசத்தைச் சேர்ந்தவர் எனவும் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

சந்தேகநபரின் வாக்குமூலத்தின்படி, மனைவி ஹொரணை பிரதேசத்தில் உள்ள பிரபல ஆடைத்தொழிற்சாலை ஒன்றில் பணிபுரிவதாகவும், அவர் இன்று அதிகாலை வேலைக்கு செல்வதற்காக வீட்டை விட்டு வெளியேறி ஹொரணை பிரதேசத்தின் வீதியொன்றுக்கு அருகில் முச்சக்கரவண்டியில் தனது கள்ளக் காதலனுடன்  தங்கியிருந்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேக நபர் வருவதைக் கண்டு திருமணமாகாத தம்பதியினர் முச்சக்கரவண்டியை விட்டு வீதியில் ஓடியதாக பொலிஸார் தெரிவித்தனர்.