web log free
June 02, 2025

72 ஓ.ஐ.சிகளின் இடமாற்றம் இடைநிறுத்தம்


72 பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகளுக்கு (ஓ.ஐ.சி) வழங்கப்பட்ட இடமாற்றம் தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் உத்தரவுப்படி உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் மறு அறிவித்தல் வரும்வரை இடை நிறுத்தப்பட்டுள்ளது.


பொலிஸ் மா அதிபரின் பரிந்துரைப்படி பொலிஸ் ஆணைக்குழுவின் அனுமதிப்படி 27 பிரதான பொலிஸ் பரிசோதகர்களும் 45 பொலிஸ் பரிசோதகர உட்பட பொலிஸ் அதிகாரிகள் 72 பேருக்கு உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இடமாற்றம் வழங்கப்பட்டது.


தற்போது அது பாதுகாப்பு செயலாளரின் பரிந்துரை மற்றும் தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் உத்தரவுப்படி இடைநிறுத்தப்பட்டுள்ளது. என அறிவிக்கப்பட்டுள்ளது

Last modified on Sunday, 06 January 2019 01:25
© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd