web log free
July 01, 2025

கொழும்பில் வாகனம் நிறுத்தும் நபர்களுக்கு ஒரு அறிவிப்பு

சீருடை அல்லது உத்தியோகபூர்வ அடையாள அட்டை இன்றி கொழும்பு நகரில் வாகனங்களை நிறுத்துவது தொடர்பான பணம் சேகரிக்க வரும் மக்களுக்கு பணம் வழங்க வேண்டாம் என கொழும்பு மாநகர சபை அறிவித்தல் விடுத்துள்ளது.

அவ்வாறான அனுமதியற்ற அனுமதிச் சீட்டுகள் வழங்கப்பட்டால் அருகிலுள்ள பொலிஸ் நிலையத்திற்கு அறிவிக்குமாறு அதன் பிரதிப் பணிப்பாளர் பொறியியலாளர் மஞ்சுள குலரத்ன தெரிவித்துள்ளார்.

வாகனம் நிறுத்துமிடத்தில் வாகனத்தை நிறுத்திய பின்னர் 5 நிமிட அவகாசம் வழங்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், வாகனம் நிறுத்துமிடத்தை விட்டு வெளியேறும் போது பணம் வசூலிக்கும் நபர் இல்லை எனில் பணம் செலுத்த வேண்டிய அவசியமில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd