web log free
September 08, 2024

விவசாயத்தை மேம்படுத்த நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய புதிய முறை

விவசாயத்துறையை நவீனமயமாக்குவதன் ஊடாக இலங்கையில் விவசாயத்துறையில் புரட்சிகரமான மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான திட்டங்களை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வலியுறுத்தினார்.

விவசாயம் தொடர்பான பிரச்சினைகளை வினைத்திறனுடன் தீர்ப்பதற்கு செயலணியொன்று ஸ்தாபிக்கப்படும் என தெரிவித்த ஜனாதிபதி, விவசாயம், பெருந்தோட்டங்கள், நீர்ப்பாசனம் மற்றும் மகாவலி அபிவிருத்தி ஆகிய அமைச்சுகளை ஒன்றிணைத்து தனியார் துறையை இணைத்து இந்த செயலணி ஸ்தாபிக்கப்படும் எனவும் குறிப்பிட்டார்.