web log free
May 02, 2024

இரத்மலானையில் துப்பாக்கிச் சூடு

இரத்மலானை ரயில் நிலையத்திற்கு அருகாமையில் நேற்றிரவு(21) ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் விசாரணை முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்றிரவு(21) 9 மணியளவில் மோட்டார் சைக்கிளில் வந்த இருவரால் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் இரத்மலானையை சேர்ந்த 40 வயதான ஒருவரே உயிரிழந்துள்ளார்.

துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டமைக்கான காரணம் இதுவரை வௌியாகவில்லை.

சடலம் களுபோவில போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.