web log free
May 06, 2025

சிங்கப்பூர் விஜயத்தை நிறைவு செய்து ஜனாதிபதி நாடு திரும்பினார்

சிங்கப்பூர் விஜயத்தை நிறைவு செய்து ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்ட தூதுக்குழு நேற்றிரவு(22) நாடு திரும்பியது.

சிங்கப்பூர் விமான சேவைக்கு சொந்தமான விமானத்தில், நேற்றிரவு 11.27 அளவில் குறித்த குழு நாட்டை வந்தடைந்ததாக கட்டுநாயக்க விமான நிலையத்தின் கடமைநேர முகாமையாளர் தெரிவித்தார்.

இரண்டு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு கடந்த 21ஆம் திகதி சிங்கப்பூர் சென்றிருந்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, அந்நாட்டின் ஜனாதிபதி மற்றும் பிரதமர் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களை சந்தித்து இருதரப்பு பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd