web log free
October 18, 2024

689,803 பேருக்கு 4395 பில்லியன் அஸ்வெசும கொடுப்பனவு

அடையாளம் காணப்பட்ட 2 மில்லியன் பயனாளிகளில் 1.5 மில்லியன் பயனாளிகளுக்கான அஸ்வெசும கொடுப்பனவுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று (29) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இதன்படி, முதற்கட்டமாக 689,803 பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் 4.395 பில்லியன் ரூபா ஏற்கனவே வைப்பிலிடப்பட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார்.

இதேவேளை, இந்த 'அஸ்வெசும' தொடர்பான தகவல்களை அறிய வேண்டுமாயின் 1924 என்ற அவசர தொலைபேசி இலக்கத்திற்கு வார நாட்களில் காலை 9.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை அழைக்கலாம் என நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்தார்.