web log free
November 05, 2025

3000 புதிய தாதியர்கள் சுகாதார சேவையில் இணைப்பு

மேலும் 3000 தாதியர்களை தாதியர் சேவைக்கு இணைத்துக்கொள்ள தேவையான நடவடிக்கைகளை துரிதப்படுத்துமாறு சுகாதார அமைச்சர் டொக்டர் கெஹலிய ரம்புக்வெல்ல நேற்று (29) அமைச்சின் அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கியுள்ளார்.

சுகாதார அமைச்சின் செயலாளர் உட்பட சுகாதார அமைச்சின் தாதியர் சேவை தொடர்பான அதிகாரிகளின் பங்குபற்றுதலுடன் சுகாதார அமைச்சில் நடைபெற்ற கலந்துரையாடலில் அமைச்சர் இதனை சுட்டிக்காட்டினார்.

பிரச்சினை இருப்பின் இது தொடர்பான அமைச்சரவை பத்திரத்தை தயாரிக்குமாறும் அமைச்சர் சுகாதார அமைச்சின் செயலாளருக்கு பணிப்புரை விடுத்தார்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd