web log free
May 17, 2024

தயாசிறி பதவி நீக்கம் குறித்து துமிந்த கருத்து

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் உள்ளக மோதல் என வெளியாட்கள் பேசினாலும் கட்சியில் அவ்வாறான நெருக்கடிகள் எதுவும் இல்லை என நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர் மேலும் தெரிவிக்கையில், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் செயலாளர் தயாசிறி ஜயசேகரவை பதவி நீக்கம் செய்யும் எண்ணம் கட்சிக்கு இல்லை.

அவர் மேலும் கூறுகையில்,

“ரகசிய விவாதம் அல்ல, 72வது ஆண்டு விழா பற்றிய விவாதம். கட்சி ஒற்றுமை மிகவும் நல்லது. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் ஏற்பட்டுள்ள நெருக்கடி குறித்து ஊடகங்கள் மூலம் பேசினால் எமக்கு பிரச்சினையில்லை, தலைவர் இருக்கிறார், செயலாளர் இருக்கிறார், தேசிய அமைப்பாளர் இருக்கிறார், அனைத்தையும் இன்று மிகத் தெளிவாகக் காணமுடிகிறது. மூத்த துணைத் தலைவர்கள் உள்ளனர். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் செயலாளரை பதவி நீக்கம் செய்ய எந்த முயற்சியும் இல்லை” என்றார்.