web log free
May 03, 2025

கேஸ் விலை அதிகரிக்கும்

லிட்ரோ எரிவாயுவின் விலை எதிர்வரும் திங்கட்கிழமை திருத்தியமைக்கப்படவுள்ளது.

இம்முறை எரிவாயுவின் விலை கணிசமான அளவு அதிகரிக்கும் எனவும் அறியமுடிகின்றது.

உலக சந்தையில் எரிவாயுவின் விலை அதிகரிப்பு மற்றும் எரிவாயு தேவை அதிகரிப்பு காரணமாக இந்த நாட்டிலும் விலையை அதிகரிக்க வேண்டிய நிலை ஏற்படும் எனவும் அந்த வட்டாரங்கள் கூறுகின்றன.

எவ்வாறாயினும், கடந்த விலை திருத்தத்தின் போது, உலக சந்தையில் எரிவாயு விலை குறைந்திருந்த வேளையில் இலங்கைக்கு பெருமளவு கேஸ் தருவிக்கப்பட்டதால் விலையை அதிகரிக்க வேண்டிய அவசியம் இல்லை என நிறுவனத்தின் தலைவர் தெரிவித்தார். 

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd