web log free
February 08, 2026

மைத்திரிக்கு வாழ்த்து தெரிவித்த மஹிந்த

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேனவின் 72ஆவது பிறந்த தினம் இன்று அனுஷ்டிக்கப்படுகிறது நிலையில், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ  அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 72ஆவது ஆண்டு நிறைவு விழா இன்று அனுஷ்டிக்கப்படுகிறது.

கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகரவின் ஆசனமான ஹெட்டிபொலவில் ஆண்டு நிறைவு விழா நடத்த திட்டமிடப்பட்டு, அழைப்பு அட்டைகள் விநியோகிக்கப்பட்டதும், அது திடீரென கொழும்புக்கு கொண்டுவரப்பட்டது.

இதேவேளை, நீண்டகாலமாக மைத்திரிபால சிறிசேனவுடன் முரண்பட்ட முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவும் இவ்வருட ஆண்டு நிறைவு நிகழ்வில் கலந்து கொள்ளவுள்ளதோடு, சிறிது காலம் கட்சியின் தலைவர் பதவியை வகித்த மஹிந்த ராஜபக்ஷவிற்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. 

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd