web log free
September 08, 2024

நாடாளுமன்ற உத்தியோகத்தர் இடைநிறுத்தம்

தேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்புடன் தொடர்புகளை வைத்திருந்த குற்றச்சாட்டில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ள நாடாளுமன்ற உத்தியோகத்தர், சேவையிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளார்.

நாடாளுமன்ற செயலாளர் நாயகத்தினால் குறித்த உத்தியோகத்தர் சேவையிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன், அவர் பயன்படுத்திய கணனி மற்றும் இதர ஆவணக்குறிப்புக்களை பொலிஸார் பொறுப்பேற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.