web log free
May 17, 2024

மக்களை கொலை செய்து ஆட்சிக்கு வந்த அரசாங்கம்

இந்த அரசு ரத்தத்தால் வந்தது, இந்த அரசு மக்களை கொன்று வந்தது என பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் இன்று (06) பாராளுமன்றத்தில் ஆளும் கட்சி மீது குற்றம் சுமத்தியுள்ளார்.

ஆளுங்கட்சிக்கு கொலை, திருட்டு மட்டும்தான் தெரியும் என்கிறார்.

அவர்களே இந்த நாட்டில் இனவாதத்தையும் மதவெறியையும் தூண்டிவிடுகின்றனர் எனவும் பாராளுமன்ற உறுப்பினர் மேலும் குற்றம் சுமத்தியுள்ளார்.

யுத்தம் முடிவடைந்த பின்னர் அடுத்த தாக்குதல் முஸ்லிம் மக்கள் மீதுதான் என்பதை தாம் அறிந்திருப்பதாகவும், அவர்களால் தான் நாட்டின் அப்பாவி முஸ்லிம் மக்கள் வாழ முடியாத நிலை ஏற்பட்டதாகவும் மேர்கார் மேலும் தெரிவித்தார்.