web log free
September 17, 2025

ஆளும் கட்சி எம்பிக்களுக்கு கட்டாய அழைப்பு

ஆளும் கட்சியின் அனைத்து அமைச்சர்களும் பாராளுமன்றத்தில் நாள் முழுவதும் பிரசன்னமாக இருப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

பாராளுமன்றத்தில் உள்ள ஆளும் கட்சி அலுவலகம் ஊடாக தொலைபேசி அழைப்புகள் மூலம் இது தொடர்பில் அவர்களுக்கு அறிவிக்கப்பட்டதாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை இன்று பிற்பகல் நடைபெறவுள்ள நிலையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொண்டுள்ள அமைச்சர்களுக்கும் இந்தச் செய்தி வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

எப்படியோ இன்று பாராளுமன்றத்திற்கு வரமுடியாத நிலையில் உள்ள அமைச்சர்களுக்கு இது குறித்து அறிவிக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Last modified on Friday, 08 September 2023 04:13
© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd