web log free
June 08, 2026

கொழும்பு உள்ளிட்ட 3 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை

தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் மூன்று மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது.

கொழும்பு, கேகாலை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

கொழும்பு மாவட்டத்தின் சீதாவக்கை பிரதேசம் மற்றும் கேகாலை மாவட்டத்தின் வரக்காபொல பிரதேசம் தொடர்பில் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும், இரத்தினபுரி மாவட்டத்தின் குருவிட்ட, இரத்தினபுரி மற்றும் எஹெலியகொட ஆகிய பகுதிகளுக்கு இந்த மஞ்சள் நிற மண்சரிவு குறித்த முன்னெச்சரிக்கை அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd