web log free
May 03, 2025

துப்பாக்கி சூடு குறித்து சிஐடி விசாரணை

பாராளுமன்ற உறுப்பினர் உத்திக பிரேமரத்னவின் வாகனத்தின் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்ட சம்பவம் தொடர்பான விசாரணைகள் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திடம் (CID) ஒப்படைக்கப்பட்டுள்ளன.

பொலிஸ் மா அதிபரின் உத்தரவிற்கமைய இந்த விசாரணைகள் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

உத்திக பிரேமரத்னவை இலக்கு வைத்து நேற்றிரவு(17) 10.30 அளவில் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பாராளுமன்ற உறுப்பினர் வாகனத்திலிருந்து இறங்கிய சந்தர்ப்பத்தில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

பாராளுமன்ற உறுப்பினருக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd