web log free
May 03, 2025

கிழக்கில் இருந்து செந்திலை விரட்டத் திட்டம்

கிழக்கு ஆளுநர் செந்தில் தொண்டமானை பதவியில் இருந்து நீக்குமாறு கோரி ஜனாதிபதியிடம் 100,000 கையெழுத்துக்களை சேகரிக்கும் வேலைத்திட்டம் திருகோணமலை மணிக்கூட்டு கோபுரத்திற்கு முன்பாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

கோகன்னபுர சேமிப்பு ஒன்றியம் இந்த கையெழுத்து சேகரிப்பு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

வணக்கத்துக்குரிய பொல்ஹெங்கொட உபரதன நாயக்க தேரர் உள்ளிட்ட பிக்குகள் குழுவும் இந்த நிகழ்விற்காக வருகை தந்துள்ளனர்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd