web log free
October 25, 2024

திரிபோஷ விநியோக திட்ட மீண்டும் ஆரம்பம்

திரிபோஷ உணவுத்திட்டத்தை தொடர்ந்து முன்னெடுப்பதற்காக 4,700 மெற்றிக்தொன் சோயா பீன்ஸ் மற்றும் சோளம் ஆகியவற்றை ஸ்ரீலங்கா திரிபோஷா லிமிடெட் நிறுவனத்திடம் சர்வதேச அபிவிருத்திக்கான ஐக்கிய அமெரிக்காவின் முகவர் அமைப்பு வழங்கியுள்ளது.

திரிபோஷ தொழிற்சாலையில் நடைபெற்ற விசேட நிகழ்வொன்றின் போதே, இவை வழங்கி வைக்கப்பட்டன.

நாட்டின் பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கை மக்களுக்கு ஆதரவளிக்கும் உலக உணவுத்திட்டத்தின் அவசர நடவடிக்கைக்கு அமெரிக்காவினுடைய 20 மில்லியன் அமெரிக்க டொலர்களின் பரந்த பங்களிப்பின் ஒருபகுதியாக இந்த உதவி அமைந்துள்ளதுடன், இலங்கை மக்களுக்கு பணம், உணவு, உதவி மற்றும் மதிப்பு வவுச்சர்களை வழங்குவதற்கு உலக உணவுத்திட்டத்துக்கு அமெரிக்கா உதவியுள்ளது. இதேவேளை, பாடசாலை உணவு மற்றும் திரிபோஷா வலுவூட்டப்பட்ட கலப்பு உணவுத் தயாரிப்பு உட்பட தேசிய உணவு மற்றும் ஊட்டச்சத்து திட்டங்களை ஆதரிப்பதாக உலக உணவுத்திட்டம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

“இலங்கை சிறுவர்களின் போசாக்கு குறைபாட்டை தடுப்பதற்கு தேவையான திரிபோஷ கலப்பு உணவுப் பொருட்களுக்கான அத்தியாவசிய பொருட்களை வழங்குவதற்காக எமது அண்மைய அவசரகால நிதியுதவியினூடாக இலங்கையுடனான எமது நீண்டகால கூட்டாண்மையை ஆழப்படுத்துவதற்கு சர்வதேச அபிவிருத்திக்கான அமெரிக்க முகவர் அமைப்பு மகிழ்ச்சியடைகிறது. கடந்த ஆண்டு நெருக்கடிக்கு பதிலளிக்கும் வகையில் எங்கள் பங்காளிகளான உலக உணவுத்திட்டம், சுகாதார அமைச்சு மற்றும் இலங்கை அரசாங்கத்தின் நெருங்கிய ஒத்துழைப்புடன் திரிபோஷா தொழிற்சாலைக்கு சோளம் மற்றும் சோயா பீன்ஸ் கடைசியாக அனுப்பப்பட்டதை நாம் அவதானித்தோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd