web log free
May 03, 2025

ஜனாதிபதிக்கு மொட்டுக் கட்சி எம்பிக்களின் ஆதரவு நாளுக்கு நாள் அதிகரிப்பு

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வேலைத்திட்டத்திற்கு மேலும் ஆதரவளிக்க ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்கள் பலர் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பொதுஜன பெரமுனவின் புதிய உறுப்பினர்களுக்கு இடையில் அண்மையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது இது தொடர்பான கருத்துக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.

இதன்படி, இவ்விடயங்கள் தொடர்பில் கட்சியின் அமைப்பாளரான முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவுக்கு அறிவிக்கப்பட வேண்டுமென தீர்மானிக்கப்பட்டதாக கலந்துரையாடலில் இணைந்த புதிய எம்.பிக்கள் கூறியுள்ளனர். 

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தலைமைத்துவத்தின் காரணமாக கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் நாட்டில் பாரிய மாற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர். 

இந்நிலைமைகளின் அடிப்படையில் எதிர்வரும் தேசியத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து கூட்டணி அமைத்து போட்டியிட வேண்டும் என அவர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd