web log free
February 07, 2026

மழை நீடிக்கும்

நாட்டின் தென்மேற்கு பகுதிகளில் மழையுடனான காலநிலை தொடரும் எனவும், மேல், சப்ரகமுவ, தெற்கு மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. 

மேற்கு சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களின் சில பகுதிகளில் மி.மீ. 75க்கு மேல் கனமழை பெய்யும் என்றும் அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

ஏனைய பிரதேசங்களில் குறிப்பாக கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில் சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

இடியுடன் கூடிய மழையுடன் கூடிய தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னலினால் ஏற்படக்கூடிய ஆபத்துக்களை குறைப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு மக்கள்  கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd