web log free
May 08, 2025

பாராளுமன்ற கட்டளைகளை மீறும் அரச அதிகாரிகளுக்கு ஆபத்து

பாராளுமன்ற குழுக்களில் முன்மொழியப்பட்ட தீர்மானங்களை சில அரசாங்க அதிகாரிகள் தொடர்ந்தும் புறக்கணிப்பதாக குழுக்களின் தலைவர்கள் குற்றம் சுமத்துகின்றனர்.

இதனை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் கவனத்திற்கு கொண்டு செல்லவும் தீர்மானித்துள்ளனர்.

மக்களின் தேவைக்கு ஏற்ப உரிய குழுக்கள் வழங்கும் தீர்மானங்களை எவ்வித அடிப்படையுமின்றி இந்த அரச அதிகாரிகள் நடைமுறைப்படுத்துவதில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.

இதன் காரணமாக மக்களுக்கு பாரிய அநீதி இழைக்கப்படும் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

சபாநாயகர் இது தொடர்பில் அனைத்து அரச நிறுவனங்களின் தலைவர்களுக்கும் அறிவிக்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd