web log free
June 14, 2026

மீரியபெத்தையில் மீண்டும் மண்சரிவு அபாயம்

கொஸ்லந்த மீரியபெத்த பழைய மண்சரிவு பகுதிக்கு அண்மித்த பகுதியில் உள்ள 244 குடும்பங்கள் உடனடியாக பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர்.

அதிக மழையுடன் மண்சரிவு அபாயம் உள்ளதால் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் பரிந்துரைகளுக்கு அமைய இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஹல்துமுல்ல பிரதேச செயலாளர் தெரிவித்தார்.

இதன்படி, கொஸ்லந்த மீரியபெத்தவில் 144 குடும்பங்களும், கொஸ்லந்த தேயிலை தொழிற்சாலை மற்றும் மஹகந்தவில் இருந்து 23 குடும்பங்களும்,  தேயிலை தொழிற்சாலை மற்றும் திவுல்கசமுல்ல, கொஸ்லந்த சிங்கள கல்லூரி மற்றும் கொஸ்லந்த தமிழ் கல்லூரியில் 81 குடும்பங்களும் தற்காலிகமாக தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

தற்போது 768 பேர் முகாம்களில் உள்ளனர்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd