web log free
January 22, 2026

ஜனாதிபதி நாட்டில் இல்லாத சமயத்தில் வெளிவந்துள்ள அதிவிசேட வர்த்தமானி

 

ஜனாதிபதியின் பதில் செயலாளரின் கையொப்பத்துடன் கூடிய விசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

மக்களின் இயல்பு வாழ்க்கையைப் பேணுவதற்கு அத்தியாவசியமான சேவைகளுக்கு தடை அல்லது இடையூறு ஏற்படக்கூடாத வகையில் இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி,

*மின்சாரம் தொடர்பான அனைத்து சேவைகளும்

*பெட்ரோலிய பொருட்கள் மற்றும் எரிபொருளின் வழங்கல் அல்லது விநியோகம்

*மருத்துவமனைகள், முதியோர் இல்லங்கள், மருந்தகங்கள் மற்றும் பிற பொது நிறுவனங்களில் நோயாளிகளின் பராமரிப்பு மற்றும் வரவேற்பு, பராமரிப்பு, உணவளித்தல் மற்றும் சிகிச்சை தொடர்பாக தேவையான அல்லது செய்ய வேண்டிய அனைத்து சேவைகள், வேலை அல்லது உழைப்பு ஆகியவை அத்தகைய அத்தியாவசிய சேவைகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.

Last modified on Wednesday, 18 October 2023 05:30
© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd