web log free
October 21, 2025

கிருலப்பனையில் துப்பாக்கிச்சூடு, காரணம் என்ன?

கிருலப்பனை மாவத்தை, இலக்கம்: 54க்கு அருகில் இனந்தெரியாத இரண்டு துப்பாக்கிதாரிகள் நேற்றிரவு வானத்தை நோக்கிச் சுட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டுவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

துப்பாக்கிச் சூட்டில் உயிரிழப்பு அல்லது காயங்கள் எதுவும் ஏற்படவில்லை, சந்தேக நபர்களின் நோக்கம் இன்னும் கண்டறியப்படவில்லை.

சம்பவம் தொடர்பில் கிருலப்பனை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd