web log free
January 06, 2026

ஆசிரியர், அதிபர்கள் மீது கண்ணீர் புகை தாக்குதல்

பிடகோட்டே - முப்பாலம் சந்திக்கு அருகில் ஆசிரியர்-அதிபரின் எதிர்ப்பு பேரணி கண்ணீர் புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகம் மூலம் கலைக்கப்பட்டது.

பல கோரிக்கைகளை முன்வைத்து ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் புத்ததாச மைதானத்திற்கு அருகில் ஆரம்பித்த ஆர்ப்பாட்டத்தின் மீது கண்ணீர் புகை மற்றும் நீர்த்தாரை தாக்குதல் நடத்தப்பட்டது.

அப்போது, போராட்டத்தில் ஈடுபட்ட சிலர், சாலை தடுப்புகளை உடைத்ததாக கூறப்படுகிறது.

இதன் காரணமாக முப்பாலம் சந்தியை சுற்றி கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd