web log free
September 03, 2025

ஜனாதிபதி ரணிலுக்கு எதிராக நாமல் தலைமையில் தனி அணி!

அரசாங்கத்திற்கு ஆதரவளிக்கும் பிரதான அரசியல் கட்சியான பொதுஜன பெரமுனவுக்கு எதிராக கலந்துரையாடல் இன்றி மேலதிக தீர்மானங்கள் எடுக்கப்பட்டால் அதற்கு எதிராக தனியான சக்தியை உருவாக்க பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எம்.பி.க்கு விசுவாசமான அமைச்சர்கள் குழுவின் தலைமையில் நேற்று முதல் கூட்டம் நடைபெற்றதாக தெரிய வந்துள்ளது.

அங்கு அண்மையில் மேற்கொள்ளப்பட்ட அமைச்சரவை திருத்தம் குறித்து நீண்ட நேரம் கலந்துரையாடியுள்ளனர்.

அந்த கலந்துரையாடலில், அரசாங்கம் செய்யும் தவறுகளுக்கு ஆதரவாக நிற்க வேண்டிய அவசியம் இல்லை என நாமல் ராஜபக்ஷ எம்.பியிடம் ஏனைய அமைச்சர்கள் தெரிவித்துள்ளனர்.

எனவே தனிப் படையொன்றை நிறுவி எதிரணியில் அமர வைக்குமாறு நாமல் எம்.பிக்கு குழு பரிந்துரைத்துள்ளது.  

 ஆனால், முடிவு எடுக்கப்படாமல் கூட்டம் முடிவடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd