web log free
September 03, 2025

ஸ்ரீலங்கன் எயர்லைன்ஸ் நிறுவனம் விற்பனைக்கு

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் பங்குகளை பெறுவதற்கு தேவையான விலைமனு கோரப்படும் என துறைமுகங்கள் மற்றும் கடற்படை விமான போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.

அதற்குத் தேவையான ஆவணங்கள் தயாரிக்கப்பட்டு முடிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச மற்றும் உள்ளூர் நிறுவனங்கள் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸின் பங்குகளை வாங்குவதற்கு விலை மனுக்களை சமர்ப்பிக்கலாம்.

விலை மனு சமர்ப்பிப்பு நடவடிக்கைகள் நிறைவடைந்ததன் பின்னர், அதற்கான பொருத்தமான நிறுவனங்களைத் தெரிவு செய்யவுள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd