web log free
November 08, 2025

30ஆம் திகதி நடக்கப்போவது என்ன?

இருபதாயிரம் ரூபா சம்பள அதிகரிப்பு மற்றும் ஓய்வூதிய முரண்பாடுகளை உடனடியாக தீர்க்கக் கோரி நாடு முழுவதும் உள்ள அனைத்து அரச ஊழியர்களும் எதிர்வரும் திங்கட்கிழமை மாபெரும் வேலை நிறுத்தம் மற்றும் எதிர்ப்பு நடவடிக்கைக்கு தயாராகவுள்ளதாக தொழிற்சங்க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அதன்படி, 20,000 ரூபா சம்பளத்தை அதிகரிக்கக் கோரி, நாடு முழுவதிலும் உள்ள ஒட்டுமொத்த அரச ஊழியர்களும் நாளை மறுநாள் வீதியில் இறங்குவதற்கு தயாராக உள்ளதோடு, தனியார் துறை, அரை அரச துறை ஊழியர்களும் இதேபோன்ற தொழில்சார் நடவடிக்கைகளை மேற்கொள்ளத் தயாராக உள்ளதாக கூறப்படுகிறது. 

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd