web log free
September 19, 2024

அரச ஊழியர்களின் கோரிக்கை அமைச்சரவைக்கு

சம்பள அதிகரிப்பு கோரி அரச ஊழியர்கள் மேற்கொண்டு வரும் பணிப்புறக்கணிப்பு குறித்து இன்று பிற்பகல் அமைச்சரவை கூட்டத்தில் கலந்துரையாடப்படவுள்ளது.

எதிர்வரும் வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகளை பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கு முன்னர் இது தொடர்பில் இறுதித் தீர்மானம் ஒன்றை எடுப்பதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எதிர்பார்த்துள்ளதாகவும் அறியமுடிகின்றது.

20000 ரூபா சம்பள அதிகரிப்பு கோரி அரச ஊழியர்கள் இன்று முதல் பல்வேறு தொழில் நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளனர்.

எவ்வாறாயினும், இந்த ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் அரச ஊழியர்களின் சம்பளம் அதிகரிக்கப்பட உள்ளதாகவும், அது எவ்வளவு என்பதை அமைச்சரவை இன்னும் தீர்மானிக்கவில்லை எனவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.