web log free
February 13, 2026

தரமற்ற கழிவுத் தேயிலை விற்பனை நிலையம் முற்றுகை

பாரியளவிலான  கழிவுத் தேயிலை விற்பனை நிலையத்தை சுற்றிவளைத்த விசேட அதிரடிப்படையினரால் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

விசேட அதிரடிப்படையின் கம்பளை முகாம் அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலுக்கு அமைய நேற்று (02) கண்டி தவுலகல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கடகும்புர, லிமகஹகொடுவ பிரதேசத்தில் சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டது.

அங்கு உரிமம் இன்றி 6,652 கிலோ கழிவு தேயிலையை பதுக்கி வைத்திருந்த லிமகஹா கொடுவ பகுதியை சேர்ந்த 37 வயதுடைய ஒருவர் கைது செய்யப்பட்டு மேலதிக விசாரணைகளுக்காக கம்பளை தேயிலை ஆணையாளர் அலுவலக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டார். 

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd