web log free
September 03, 2025

ஜனாதிபதி பயணித்த ஹெலிகாப்டருக்கு நடந்தது என்ன?

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் நுவரெலியா நோக்கி பயணித்த உலங்குவானூர்தி மோசமான காலநிலை காரணமாக இன்று (3) பிற்பகல் வெல்லவாய பகுதியில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.

ஜனாதிபதி பயணித்த உலங்குவானூர்தி திடீரென வெல்லவாய புத்ருவகல பாடசாலை மைதானத்தில் தரையிறக்கப்பட்டுள்ளது.

புத்ருவகல பாடசாலையில் சுமார் 50 நிமிடங்கள் தங்கியிருந்த ஜனாதிபதி, மீண்டும் வாகனம் புறப்படும் வரை காத்திருந்ததுடன் பாடசாலை மாணவர்களும் அங்கு வந்து சிநேகபூர்வமாக உரையாடினர்.

அதன் பின்னர் ஜனாதிபதி வெல்லவாயவில் இருந்து தரை மார்க்கமாக நுவரெலியாவிற்கு புறப்பட்டார்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd