web log free
February 14, 2026

வடக்கில் நான்கு நாட்கள் தங்கி இருக்கும் சீனக் குழு செய்யப்போவது என்ன?

வடக்கின் 5 மாவட்டங்களிற்குமான 4 நாள் பயணமாக நாளை சீனத் தூதுவர் உள்ளிட்ட குழுவினர் வருகை தருகின்றனர். 

வவுனியாவை நாளை காலை 10 மணிக்கு வந்தடையும் குழுவினர், வவுனியா மாவட்டத்தில் 500 பேருக்கான வாழ்வாதார பொதிகள் வழங்கி வைக்கும் தூதுவர் அங்கிருந்து முல்லைத்தீவு மாவட்டத்திற்கு பயணிக்கும் தூதுவர் முல்லைத்தீவு மாவட்டத்தின் 5 பிரதேச செயலாளர் பிரிவிற்கான 500 பொதிகளை மாவட்ட அரச அதிபரிம் கையளிப்பதோடு வெலிஓயாவிற்கான 250 பொதிகளை தாமே நேரில் வழங்குகின்றனர். 

இதனைத் தொடர்ந்து மாலை 5 மணிக்கு கிளிநொச்சி மாவட்டத்தில் கிளிநொச்சி மாவட்டச் செயலாளரிடம் பொதிகளை கையளித்த பின்பு யாழ்ப்பாணம் வருகை தந்து மறுநாள் 6ஆம் திகதி சீனத் தூதுவர் மற்றும் சீன பௌத்த அமைப்பின் பிரதிநிதிகள் காலை 9 மணிக்கு யாழ் ஆயரைச் சந்தித்துக் கலந்துரையாடுவதோடு 10 மணிக்கு மாவட்டச் செயலகத்தில் அரச அதிபரைச் சந்தித்துக் கலந்துரையாடி நெடுந்தீவு மக்களிற்கு 500 பொதிகள் கையளிக்க உள்ளனர். 

இதனையடுத்து மாலை 2 மணிக்கு நாவற்குழி விகாரைக்குப் பயணிக்கின்றனர். 

இதேநேரம் 7 ஆம் திகதி காலை நயினாதீவு பயணிக்கும் சீனக் குழுவினர் நாகவிகாரைக்கு 250 பொதிகள் வழங்குகின்றனர். அதனையடுத்து 7 ஆம் திகதி மாலை மன்னாரிக்குப் பயணித்து 8 ஆம் திகதி மன்னார் நிகழ்வுகளில் பங்குகொண்டு 8 ஆம் திகதி மாலை கொழும்பு திரும்புகின்றனர்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd