web log free
September 03, 2025

டெங்கு குறித்து விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

டெங்கு அதிக அபாயமுள்ள பகுதிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக சுகாதார அமைச்சின் தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.

இந்த நாட்களில் நாட்டில் பெய்து வரும் மழையினால் டெங்கு அபாயம் கணிசமாக அதிகரித்துள்ளதாக அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இதன்படி, டெங்கு அபாய வலயங்களின் எண்ணிக்கை 36 ஆக அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவின் பணிப்பாளர் டொக்டர் நளின் ஆரியரத்ன தெரிவித்துள்ளார்.

வீடுகள் மட்டுமின்றி பொது இடங்கள், அரச மற்றும் தனியார் நிறுவனங்களிலும் நுளம்புகள் பெருகும் இடங்கள் கண்டறியப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதன் காரணமாக கொசுக்கள் உற்பத்தியாகும் இடங்களை அழிப்பதற்கு மக்கள் ஆர்வம் காட்ட வேண்டுமென அவர் மேலும் தெரிவித்தார்.

இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் இலங்கையில் 69,008 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதோடு, கடந்த மாதத்தில் மாத்திரம் 4,000 பேர் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd