web log free
July 02, 2025

தினேஷ் ஷாப்டரின் கொலை விசாரணையில் திருப்பம்

கோடீஸ்வர தொழிலதிபர் தினேஷ் ஷாஃப்டரின் நெருங்கிய உறவினர் ஆயுள் காப்பீட்டுத் தொகைக்காகவோ அல்லது அவரது சொத்தைப் பெறுவதற்காகவோ அவரை கொலை செய்தாரா என்பது தொடர்பில் விசாரணையாளர்களின் கவனம் திரும்பியுள்ளது. 

அதனால் தினேஷ் ஷாப்டரின் காப்புறுதி உட்பட பல விடயங்களில் தற்போது விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

தினேஷ் ஷாஃப்டரின் மரணம் குற்றம் என்று நீதிமன்றம் தீர்ப்பளித்ததால், கொலையாளிகளை கண்டறிய கொலை மற்றும் கும்பல் கொள்ளை விசாரணைப் பிரிவு விசாரணையைத் தொடங்கியுள்ளது.

சிங்கப்பூர் மற்றும் ஐக்கிய இராச்சியத்தில் அவருக்குச் சொந்தமான சொத்துக்கள் தொடர்பிலும் விசாரணையாளர்கள் விசாரிக்க உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

பல கோடி ரூபாய் ஆயுள் காப்பீட்டுத் தொகையைப் பெறுவதற்காக, ஷாப்டரின் நெருங்கிய உறவினர் ஒருவர் இந்தக் கொலையைச் செய்தாரா என்ற சந்தேகம் தற்போது எழுந்துள்ளது.

கொழும்பு மேலதிக நீதவான் ரஜீந்திர ஜயசூரிய அண்மையில் ஷாஃப்டருக்கான காப்புறுதி இழப்பீட்டுத் தொகையை ஒரு வார காலத்திற்கு இடைநிறுத்துமாறு காப்புறுதி நிறுவனங்களின் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

ஷாஃப்டரின் மரணம் தொடர்பாக விசாரணை நடத்த நியமிக்கப்பட்ட ஐவர் குழுவின் உறுப்பினர்கள், இது தொடர்பான அறிக்கை குறித்து கொலை மற்றும் கொள்ளை கும்பல் விசாரணை பிரிவு அதிகாரிகளுக்கு தெரிவித்துள்ளனர்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd