web log free
May 06, 2025

வரவு செலவு திட்டத்திற்கு முன் பசிலின் கழுத்தை இருக்கும் எம்பிக்கள்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்மொழிவுகள் அடுத்த வருட வரவு செலவுத் திட்டத்தில் சமர்ப்பிக்கப்படாவிடின் அதற்கு ஆதரவளிப்பது குறித்து இருமுறை சிந்திக்க வேண்டும் என கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் சிலர் பசில் ராஜபக்ஷவிடம் தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மக்களுக்கு சேவையாற்றுவதற்காக வரவு செலவுத் திட்டத்திற்கு முன்னர் தமது கட்சியின் மூத்த தலைவர்களுக்கு அமைச்சுப் பதவிகளை வழங்குமாறு முன்னர் கோரிக்கை விடுத்திருந்த போதிலும் ஜனாதிபதி அதனைச் செய்யத் தவறியதாகவும் அவர்கள் குற்றம் சுமத்துகின்றனர்.

எனவே குறைந்த பட்சம் அந்தந்த அமைச்சர்களின் பிரேரணையாவது வரவு செலவு திட்டத்தில் உள்ளடக்கப்படாவிட்டால் கிராமங்களுக்கு சென்று எதிர் கொள்ள முடியாத நிலை ஏற்படும் என பசில் ராஜபக்ஷவிடம் அவர்கள் வலியுறுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

எனவே இது தொடர்பில் ஜனாதிபதிக்கு அறிவிக்குமாறும் அவர்கள் மேலும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd