web log free
May 06, 2025

செனல் 4 வீடியோ – சட்டமா அதிபர் திணைக்கள விசாரணை தொடர்கிறது

ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில் செனல் 4வின் குற்றச்சாட்டுகள் தொடர்பில் சட்டமா அதிபர் தற்போது விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

செனல் 4 அறிக்கை தொடர்பில் உரிய நடவடிக்கை எடுப்பதற்காக சட்டமா அதிபர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றார்.

எனினும் தெரிவுக்குழு நியமனம் தொடர்பான முன்னேற்றம் தெரியவில்லை என பாராளுமன்ற உறுப்பினர் ஹெக்டர் அப்புஹாமி எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் பதிலளித்தார்.

 மொத்தம் 311 மில்லியன் ரூபா நட்டஈட்டுத் தொகையில் ரூ. 36.8 மில்லியன் மாத்திரமே முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதி பொலிஸ் மா அதிபர் நிலந்த ஜயவர்தன, முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ ஆகியோரால் வைப்புச் செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd